கணவனால் கைவிடப்பட்ட ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நிஜ வாழ்க்கையில் கஷ்டப்படும் பெண்களுக்கு ஒரு ஊக்கமாக உள்ளது.
முதன்முதலாக இந்த சீரியலில் நாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளுக்கு இணையாக பேசப்படுபவர் ரோஷினி என்கிற கண்ணம்மா. இவர் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட காற்றுக்கென்ன வேலி சீரியலின் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். அந்த சீரியல் பிரபலங்களுடன் கண்ணம்மா எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.