சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில் என்ற பாடலின் டீசரை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்யிருந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர
இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அப்போது அவர் மனம்விட்டுப் பேசினார். அதில், மன்மதன் படத்திற்குப் பிறகு மாநாடு படத்தில்தான் அழுது நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் மது அருந்துவதை விட்டு ஓராண்டு ஆவதாகவும் கூறியுள்ளார்.