குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமான அஸ்வின் குமார் தற்போது கோலிவுட்டில் கதாநாயகனாகிவிட்டார். புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் என்ன சொல்லப் போகிறாய் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அஸ்வின். அந்த படத்தில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார்.
படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்துடன் மூன்று பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் அஸ்வின்.
என்ன தான் படத்தில் இருந்தாலும் அஸ்வின் சமூக வலைதளங்களிலும் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அஸ்வினுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம்.
சரி அதற்கும், தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா, இருக்கே. பல பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என்று கிண்டலாக வெளியான படத்தை பார்த்த அஸ்வினுக்கு ஒரு நிமிடம் பகீர் என்று ஆகிவிட்டது. இதையடுத்து அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.