சிம்பு எப்படிப்பட்டவர்? உண்மையை சொன்ன மாநாடு நடிகை

samayam tamil 3
samayam tamil 3

சிம்பு ஒரு நடிகராக, மனிதராக எப்படிப்பட்டவர் என்று மாநாடு படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் அஞ்சனா க்ரித்தி தெரிவித்துள்ளார்.

மாநாடு படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் அஞ்சனா க்ரித்தி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாநாடு படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பவர் அஞ்சனா க்ரித்தி. மாநாடு படத்தில் நடித்தது பற்றி அஞ்சனா கூறியதாவது, நான் கடந்த சில ஆண்டுகளாகவே வெங்கட் பிரபு மற்றும் அவரின் குழுவுடன் பயணிக்கிறேன். மாநாடு படத்தில் வரும் இரண்டாவது கதாநாயகி கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்தார் வெங்கட் பிரபு. அப்படித் தான் எனக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நான் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறேன். அது முக்கியமான கதாபாத்திரம். சிம்பு செம ஜாலியான ஆள். சிறந்த நடிகர், தன்மையான நபர். எனக்கு அவரை பல ஆண்டுகளாக தெரியும். ஆனால் தற்போது தான் முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். தன்னுடன் நடிப்பவர்களை ஊக்குவிக்கத் தவறாதவர் சிம்பு. அவருடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி என்கிறார் அஞ்சனா.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பை துவங்கினோம். ஆனால் ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படப்பிடிப்பை நடத்துவது கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஆயுர்வேத மருத்துவர் இருந்தார் என்று அஞ்சனா தெரிவித்துள்ளார்.

நான் தற்போது ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் சேர்ந்து நடித்து வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மேலும் அறம் செய் படத்திலும் நடிக்கிறேன். கலையரசன் ஜோடியாக ஹாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன் என்று அஞ்சனா க்ரித்தி தெரிவித்துள்ளார்.