விஜய்யின் சாதி பெயர் கேட்டால் போராட்டத்தில் இறங்குவேன் – எஸ்.ஏ.சந்திரசேகர்!

thalapathy vijay cinemapettai 1280x720 1
thalapathy vijay cinemapettai 1280x720 1

‘சாயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கத்தில் வெளியாகவுள்ள சாயம் படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அபி சரவணன் சாயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப்படத்தில் சைனி என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் பொன்வண்ணன் , இளவரசு , மெட்டி ஒலி புகழ் போஸ் வெங்கட் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு யுகபாரதி மற்றும் விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநரும் நடிகர் விஜய்யினுடைய தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது. என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் நடைமுறையில் என்ன செய்திருக்கிறோம்..? என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் சாதி , மதம் என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என்று நான் கூறியதும், பின்னர் அமைதியாக அவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டனர்.

அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.