பாக்கியலட்சுமி தொடரில் கடந்த வாரம் எல்லாம் நன்றாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருந்தது. பக்கத்து வீட்டு பெண்கள் உதவியுடன் 1000 பேருக்கு சமையல் செய்து சாதித்து காட்டினார் பாக்கியா.
அதற்காக அவருக்கு நினைத்ததை விட அதிக சம்பளமே கிடைத்தது, ஆனால் அந்த சந்தோஷம் அவருக்கு ஒரு நாள் கூட இல்லை.
அதற்குள் அவரது பணத்தை விஷமிகள் திருடிவிட்டார்கள், இதனால் கோபி, பாக்கியாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை வந்துவிட்டார்.
கடைசியில் எழில் பணத்துடன் வந்து தனது அம்மாவை காப்பாற்றிவிட்டார்.
அந்த பணத்தை பார்த்து பாக்கியா விடும் கண்ணீர் அனைவரையும் அழ வைத்துவிட்டது.