பிக்பொஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருநங்கை சமூகத்தை சேர்ந்த சகோதரி ஒருவர், நமீதா ஒரு திருநங்கையாக தன் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்டதை எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார். அவர் தாமரையுடன் சண்டையிட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் கோபட்டாலும் பின்னர் மனமிறங்கி மன்னித்து அவர்களுடன் சகஜம் போல் பழகிடுவார். அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் தான் இருக்கிறார். நான் தொலைபேசியில் பேசினேன் என பேட்டி கொடுத்துள்ளார்.