விவாகரத்துக்கு பிறகு சம்மதம் சொன்ன சமந்தா: வெளியான பரபரப்பு தகவல்!

201907010425063682 Samantha is the producer SECVPF
201907010425063682 Samantha is the producer SECVPF

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சாந்தரூபன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் விவாகரத்து செய்ய போவதாக சமீப காலமாகவே ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் அண்மையில் இருவரும் இன்று தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலிக்க துவங்கினார்கள். அதன்பின்னர் இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கியதும் இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் மிக பிரமாண்டமாக, இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடந்தது.

இந்நிலையில் நாக சைதன்யாவுடன் விவாகரத்து விஷயம் கசிய துவங்கியத்தில் இருந்து சில மாதங்களாகவே சமந்தா எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் முழு ஓய்வில் இருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிவதாகக் கூட்டாக அறிவித்தனர்.

இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு சமந்தா அடுத்து நடிப்பதற்காகப் புதிய கதைகள் கேட்டு வந்தார். இதில் அவருடைய புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்கவுள்ளார். சமந்தாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் சமந்தா நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படத்திலும் நடித்து வருகிறார்.