20களில் இருந்தபோது காதலருக்கு துரோகம் செய்ததாக நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுஷா தந்தேகர் தெரிவித்துள்ளார்.
இந்தி படங்களில் நடிப்பதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அனுஷா தந்தேகர். பிரபல பொலிவுட் நடிகர் இர்பான் அக்தரின் காதலியான நடிகை ஷிபானியின் தங்கை.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார் அனுஷா. அப்பொழுது ரசிகர் ஒருவர் கேட்டதாவது, எப்பொழுதாவது காதலில் துரோகம் செய்தது உண்டா என்று கேட்டார்.
அதற்கு அனுஷா கூறியதாவது,
என் 20களில் துரோகம் செய்திருக்கிறேன். ஆனால் உடனே அது குறித்து அந்த நபரிடம் கூறி, உறவை முறித்துக் கொண்டேன். நாங்கள் தற்போதும் நண்பர்களாக இருக்கிறோம்.
தற்போது நான் தனிமையாக, கவர்ச்சியாக, சுதந்திரமாக இருக்கிறேன் என்றார்.
அனுஷா மேலும் கூறியதாவது,
எனக்கு 16 வயதில் இருந்து மார்பகத்தில் கட்டி இருந்தது. நான் ஆஸ்திரேலியாவில் பள்ளியில் படித்தபோது நம் உடம்பை செக் செய்ய சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் கவனித்து சுதாரித்துக் கொண்டேன். அனைத்து பள்ளிகளும் இதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பல கட்டிகள் அகற்றப்பட்டது. ஆனால் பெரிய கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை முடிந்த பிறகு புதிதாக ஒரு கட்டி வந்தது. அப்பொழுது பயாப்சி செய்தது தான் மிகவும் வலியாக இருந்தது. அந்த நேரத்தில் அம்மாவும் துணைக்கு இல்லை என்றார்.