ரஜினி படங்களுக்காக கடுமையாக உழைத்தேன் – ஏ.ஆர்.ரஹ்மான்

202105251555533305 Tamil News Tamil cinema singer asking help to ar rahman SECVPF
202105251555533305 Tamil News Tamil cinema singer asking help to ar rahman SECVPF

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இதனால் குறுகிய காலத்தில் பொலிவுட், ஹாலிவுட் என்று வேகமாக வளர்ந்து விட்டார். அதோடு, ஆஸ்கர் விருதும் பெற்று உலக அளவில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.

இந்தநிலையில் தற்போது ரஹ்மான் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி படங்களுக்காக தான் கடினமாக உழைத்ததாக தெரிவித்துள்ளார். அதாவது ரஜினி நடிக்கும் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கும் தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கே படம் வெளியிடப்படும் என்பார்கள். அதனால் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் பின்னணி இசையமைக்க சொல்வார்கள். இதனால் மற்ற நடிகர்களின் படங்களைவிட ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்திருக்கிறேன். அதுவும் எனது காணொளி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி மின்சாரம் நிற்கும் என்பதால் இயந்திரத்தின் உதவியுடன் பணியாற்றினேன். ரஜினி படம் என்பதால் மற்ற நடிகர்களின் படங்களை விட அவரது படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.