விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.
அதே நாடகத்தில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த, நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தை சென்ற வருடம் பிறந்தது. குழந்தை பிறந்த பின், மீண்டும் ராஜா ராணி கட்டம் 2 தொடர் மூலம் சின்னத்திரையில் நடிக்க வந்தார்.
நடிகை ஆல்யா மானசா அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் அல்லது காணொளிகளை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது மகளின் சமீபத்திய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆல்யா மானசாவின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.