தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பிரபலங்களில் கொண்டாடப்படும் சூப்பர் ஜோடி இருக்கிறார்கள். அதில் ஒரு ஜோடி தான் சினேகா-பிரசன்னா.
இருவரும் காதலிக்கிறார்களா என்று ரசிகர்கள் யோசித்து முடிக்கும் முன்பே அழகாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.
நேற்று ஜனவரி 24, சினேகா மற்றும் பிரசன்னா தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அழகான புகைப்படம் வெளியிட்டார்கள். அதாவது அவர்களது மகள் ஆத்யந்தாவின் இரண்டாவது பிறந்தநாளுக்காக அழகான புகைப்படங்கள் பதிவிட்டிருந்தார்கள்.
தற்போது பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து குழந்தையின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள்.
இதோ அவர்களது கொண்டாட்ட புகைப்படங்கள்