சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் – நாகர்ஜூனா

202112061504343926 Nagarjuna reacts to Samantha and Naga Chaitanyas divorce SECVPF
202112061504343926 Nagarjuna reacts to Samantha and Naga Chaitanyas divorce SECVPF

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா 4 வருட திருமண வாழ்க்கைக்கு பின் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

இதனிடையே நாக சைதன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகர்ஜூனா அவர்கள் பிரிவு குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது “சமந்தா தான் முதலில் விவாகரத்து வேண்டுமென்று விண்ணப்பித்தார். நாக சைதன்யா சமந்தாவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தாலும், நான் என்ன நினைப்பேன், குடும்ப பெயர் என்னவாகும் என்பது குறித்து மிகவும் கவலைப்பட்டார்.

நான் மிகவும் கவலைக்கு உள்ளாவேன் என நினைத்த நாக சைதன்யா எனக்கு ஆறுதல் கூறினார். 4 வருடம் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பிரச்சனை அவர்களுக்குள் வந்ததில்லை.

இருவரும் நெருக்கமாகத்தான் இருந்தார்கள். ஆனால் இப்படியான முடிவை அவர்கள் எடுக்க என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை. 2021 ஆம் புத்தாண்டை கூட ஒன்றாகத்தான் கொண்டாடினார்கள். அதன் பிறகுதான் அவர்களுக்குள் ஏதோ பிரச்னை ஏற்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.