துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானார்.
இதன்பின், பிக் பொஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். பிக் பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், தற்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என எடக்குமடக்கான கேள்வி கேட்டார்.
இதற்கு சற்றும் தாமதிக்காமல், ‘இல்லை, நான் யாஷிகா’ என பதிலடி கொடுத்துள்ளார் யாஷிகா. நடிகை யாஷிகாவின் துணிச்சலான செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.