நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் பல திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிக்காட்டி சாதித்தவர் பாக்யராஜ்.
இவர் பிரவீனா என்பவரை முதலில் திருமணம் செய்தார், ஆனால் அவர் உடல்நலக் குறைவால் இறந்துபோக 1984ம் ஆண்டு பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார்.
பாக்யராஜ் மற்றும் பூர்ணிமாவிற்கு திருமணம் ஆகி 38 வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு சரண்யா மற்றும் சாந்தனு என மகன், மகள் உள்ளனர்.
தற்போது பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தங்களது 38 வயது திருமண நாளை தங்களது மகன், மகள் என குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த புகைப்படங்களை நடிகர் சாந்தனு இன்ஸ்டாவில் பகிர்ந்து தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.