மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் -2 சுவரொட்டி இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்‘ இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரம் 28-ஆம் திகதி வெளியாகும் என படக்குழு நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், வெளியாகும் திகதியுடன் கூடிய புதியசுவரொட்டி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சுவரொட்டியை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.