திகதி குறிப்பிடப்படாமல் தனுஷின் வழக்கு தள்ளிவைப்பு

i3 1
i3 1

மதுரை வேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனுஷ் தான் கஸ்தூரிராஜாவின் மகன் என்பதற்கான ஆதாரங்களை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் தனுஷ் தாக்கல் செய்த ஆதாரங்கள் போலியானவை என்று கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் மதுரை மாவட்ட 6வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்யுறுமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. பின்னர் திகதி குறிப்பிடப்படாமல் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.