குருதி ஆட்டத்தில் அதர்வா தலையீடு இல்லை!

i3
i3

அதர்வா முரளி, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி, பேபி திவ்யதர்ஷினி நடித்துள்ள படம் ‛குருதி ஆட்டம்’. ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகாநந்தம் தயாரிக்கிறார்.

யுவன் இசை அமைக்கிறார். ஸ்ரீகணேஷ் இயக்குகிறார். படத்தின் படிப்புகள் முடிந்திருக்கிறது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

படத்தில் அதர்வா தலையிடுவதாகவும், காட்சிகளை மாற்றச் சொன்னதாகவும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து இயக்குனர் ஸ்ரீகணேஷ் கூறும்போது அதர்வா முரளி எப்போதும் இயக்குநர்களின் நடிகராகவே இருந்து வருகிறார்.

ஆனால் எப்படிப்பட்ட நடிகரானாலும் தொடர்ந்து வெற்றி படங்களை தந்து வருபவர்கள் என்னைப் போல் புதுமுக இயக்குநர்களுக்கு திரைக்கதையில், இயக்கத்தில், தங்களது அறிவுரையை வழங்குவார்கள். ஆனால் அதர்வா முரளி ஒரு சிறு துளி கூட அப்படி நடக்கவில்லை. திரைக்கதையை கேட்டு ஒப்புக்கொண்ட பிறகு, அவர் தன்னை முழுதாக என்னிடம் ஒப்படைத்துவிட்டார்.

ப்ரியா பவானி சங்கர் தமிழ் பேசும் நடிகையாக பல உயரங்களுக்கு செல்லக்கூடிய திறமைசாலி. அவர் தந்து வரும் தொடர் வெற்றி படங்கள் மட்டுமல்ல, வரவிருக்கும் அவரது படங்களும் மிகப்பிரமாண்டமான இடத்தை அவருக்கு தரக்கூடியது. பேபி திவ்யதர்ஷினி, இத்திரைப்படம் மூலம் மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.