படப்பிடிப்பில் சிம்பு சரியாக வருகிறார்

i3 6 1
i3 6 1

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பில் சிம்பு சரியாக வருகிறார் என படக்குழுவினரே ஆச்சர்யத்தில் உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் சிம்பு மீண்டும் பிரச்சினை செய்வதாக செய்தி வெளியானது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், “மாநாடு படத்தின் முற்கட்ட படப்பிடிப்பு வெறும் ஏழு நாட்கள் தான் நடந்து முடிந்துள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் ஐதராபாத்தில் தொடங்குகிறது.அதற்குள் சிம்பு படப்பிடிப்புக்கு வராமல் பிரச்சினை செய்வதாக பொய்யான தகவலை சிலர் திட்டமிட்டே பரப்பி வருகிறார். ஏற்கனவே நடந்து முடிந்த ஏழு நாள் படப்பிடிப்பிலும் சிம்பு முழு ஒத்துழைப்போடு கலந்துகொண்டார். சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவதுடன், சிறப்பாக நடித்தும் கொடுக்கிறார்.