எல்லா பெண்களுக்கும் நான் மகளிர் தின வாழ்த்துக்களை சொல்வேண்னு மட்டும் நினைக்காதீங்க.
அப்படி நான் சொல்லப் போவதில்லை – எல்லா நாளும் மகளிர் தினமாகத்தான் ஒவ்வொரு மகளிருக்கும் இருக்க வேண்டும்.
இன்று மகளிர் தின வாழ்த்துக்களை சொல்லி விட்டு, மறு நாள் காலை பேப்பரைத் திறந்தால், பாலியல் வன்முறை, பெண் பலி என முகத்தில் அறையும் செய்திகளைப் பார்க்கும்போது, வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் மாற்றப்பட வேண்டும் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார் .