உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய – மாநில அரசுகள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளன. இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமியும் தனது டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.
நாம் அனைவருமே உலகளாவிய ஒரு கொடிய தொற்று நோயை எதிர்கொள்வதால் அனைவரும் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
உடல்நலம் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கும் அறிவுறுத்துங்கள்.
நாம் பொறுப்புடன் இருக்க வேண்டும். அது நமக்கும், நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.