சிங்கமுத்து ,மனோபாலா மீது நடவடிக்கை எடுங்கள்; வடிவேலு கோரிக்கை!

i3 7
i3 7

தன்னை பற்றி அவதூறு பேசிய நடிகர் சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது நடவடிக்கை கோரி நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு கோரிக்கை அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் வடிவேலு. ஆனால் பல பிரச்னைகளால் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியே உள்ளார். இன்றைக்கு புதுமுகங்கள் பலரும் காமெடி செய்து வந்தாலும் அவர்களால் வடிவேலு இடத்தை பிடிக்க முடியவில்லை. வடிவேலுவின் காமெடி குழுவில் முக்கிய நபராக இருந்தார் நடிகர் சிங்கமுத்து. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். மேலும் நிலப்பிரச்னை தொடர்பாக இவர்கள் இருவரும் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது.

நடிகர் மனோபாலா தனது யு-டியூப் சேனலில் சிங்கமுத்துவை பேட்டி கண்டார். இதில் வடிவேலு பற்றிய சிங்கமுத்து அவதூறு பேசியதாக தெரிகிறது. இதனால் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் சங்கம் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் வடிவேலு.