யானையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை : தனுஷ் பட நாயகி ஆவேசம்

i3 27
i3 27

கடந்த சில நாட்களாக கேரளாவை மட்டுமல்ல தமிழகத்தில் இருப்பவரையும் உலுக்கியது யானை ஒன்று வெடி வைத்து கொல்லப்பட்ட செய்தி. கர்ப்பிணியான யானை பசியால் அலைந்தபோது அன்னாசி பழத்துக்குள் பட்டாசை திணித்து வைத்து அதை யானைக்கு கொடுத்துள்ளனர். அதை அறியாமல் யானை உண்டபோது அதன் வாய் வெடித்தது.. பின்னர் சில மணி நேரங்களில் தண்ணீரில் நின்றபடி உயிரை விட்டது. இந்த புகைப்படம் காண்பவர்களை கண்கலங்க வைப்பதாக இருந்தது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அதிகபட்சமாக முதல் தர மரண தண்டனையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கொந்தளித்துள்ளார் மலையாள நடிகை ரஜிஷா விஜயன்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் தான் இந்த ரஜிஷா விஜயன். இதுபற்றி அவர் கூறும்போது, “அந்த யானை அவ்வளவு வலியால் துடிதுடித்து சுற்றியபோதும் எந்த மக்களுக்கோ, வீடுகளுக்கோ துளியளவு கூட சேதம் விளைவிக்கவில்லை. தங்களை நம்பிய ஒரு மிருகத்துக்கு இப்படி ஒரு தீங்கை செய்திருக்கிறார்கள் என்றால் இது குரூரத்தின் உச்சம். மனிதர்கள் இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் கூட செய்வார்களா என நினைத்தே பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு முதல் தர மரண தண்டனையை வழங்க வேண்டும்” என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் ரஜிஷா விஜயன்.