என்னை அசிங்கப்படுத்துபவர்களுக்கு வாழ்க்கையே இல்லை – நிலா

i3 13 1
i3 13 1

எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிலா. டில்லியை பூர்வீகமாக கொண்ட இவரது இயற்பெயர் மீரா சோப்ரா. ஜாம்பவான், மருதமலை, லீ, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் மீரா சோப்ரா நடித்துள்ளார்.

சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் போது தனக்கு ஜுனியர் என்டிஆரை விட மகேஷ் பாபு தான் பிடிக்கும் என்றார். இதைக்கேட்ட ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள், மீரா மீது கடும் கோபம் கொண்டு, அவரை அசிங்கமாக திட்டி வருகின்றனர். இதனால் மனமுடைந்த மீரா, ஜூனியர் என்டிஆரை டேக் செய்து ஒரு டுவீட் செய்தார். ஆனாலும் அவரை டிரால் செய்யப்படுவது நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில் மீரா சோப்ரா மீண்டும் ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், “என்னை அசிங்கப்படுத்துபவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உலகம் முழுவதும் இன்று கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிக கடுமையாக இருக்கிறது. ஆனால் நான் நீங்கள் விரும்பும் நட்சத்திரத்தின் ரசிகை இல்லை என்பதால் என்னை அசிங்கமாக பேசுவதன் மூலமும் மிரட்டுவதன் மூலமும் நீங்கள் சின்னதாக மகிழ்ச்சி அடைகிறீர்கள். போய் வாழ்கையை பாருங்கள்”, என கொந்தளித்துள்ளார்.