ரஜினியை கிண்டல் செய்த ரோஹித் ராய்

i3 21 1
i3 21 1

பிரபல பாலிவுட் நடிகர் ரோஹித் ராய். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் ஜாலியாக ஒரு பதிவிட்டார்.

அந்த பதிவில் “ரஜினி, கோவிட் 19 பரிசோதனை செய்தார். அதன் பிறகு கொரோனா வைரஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரோஹித் ராயை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு ரோஹித் ராய் அளித்த பதில் வருமாறு: நண்பர்களே கூலாக இருங்கள். அது ஒரு ஜாலியான பதிவு.

குறிப்பாக ரஜினியை உயர்வாக குறிப்பிடும் பதிவு. நீங்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு என்னை பற்றி அவதூறாக பதிவிடுகிறீர்கள்.

அது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. நான் யாரையும் காயப்படுத்தவில்லை. என்னை யாரும் காயப்படுத்த வேண்டாம் என்கிறார் ரோஹித் ராய்.