நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கடந்தாண்டு மார்ச் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாகவே உள்ளனர். சாயிஷாவின் சமீபத்தில் உடல் தோற்றத்தை கண்டு அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவியது. ஆனால் இதை சாயிஷாவின் தாயார் மறுத்து இருந்தார்.
இந்நிலையில் இதுப்பற்றி ஆர்யாவிடம் போனில் கேட்டபோது அவர் கூறுகையில், இவர்களுக்கு வேற வேலையே இல்லையா, இதைப்பற்றியே யோசிப்பார்களா. நான் இப்போது சல்பேட்டா, அரண்மனை 3 படங்களிலும், சாயிஷா 2 கன்னட படங்களிலும் நடிக்கிறார். இரண்டு பேருமே படங்களில் பிஸியாக உள்ளோம். ஆனால் இது போன்ற செய்தியை பரப்புவர்கள் யார் என்றே தெரியவில்லை. குழந்தை பெற்றுக் கொள்ள கொஞ்சம் காலம் எடுத்துள்ளோம். என் மனைவி கர்ப்பம் என்றால் நானே தெரிவிக்கிறேன். யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றார்.