படப்பிடிப்பு வர ஹீரோ, ஹீரோயின்கள் தயக்கம் ?

i3 30
i3 30

இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு மூன்று மாத காலம் ஆகப் போகிறது. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் படப்பிடிப்பை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

டோலிவுட்டைப் பொறுத்தவரையில் ஆந்திர, தெலங்கானா அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதிக கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார்கள். கோலிவுட்டில் டிவி தொடர்கள் படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு நடந்து வருகிறது.

இதனிடையே, முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் படப்பிடிப்பு வைக்கப்பட்டால் அதில் வந்து கலந்து கொள்ள இயலாது என சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்து வருகிறார்களாம். கொரோனா பரவல் தற்போது அதிகமாகி உள்ள சூழ்நிலையில் அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் மூன்றிலுமே இதுதான் நிலைமை என்கிறார்கள். தமிழ்நாட்டில் முன்னணியில் உள்ள சீனியர் நடிகர்கள் இருவரும் வெளியில் எங்கும் தலை காட்டுவதில்லை. 60 வயதைக் கடந்துவிட்ட காரணத்தால் அவர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள் என்கிறார்கள்.

பல கோடி ரூபாய் செலவில் அவர்களது படங்களின் படப்பிடிப்பு நடந்து அப்படியே நிற்கிறது. அதில் ஒருவரது படத்தின் வெளியீட்டுத் தேதியை வேறு அறிவித்துவிட்டார்கள். ஆனால், அதன்படி படம் வெளிவர வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் சொல்கிறார்கள்.