ஏராளமான சாராய போத்தல்கள் ;ரம்யா கிருஷ்ணன் காரில்

i3 1 3
i3 1 3

சென்னையில் மதுபானக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் மது விற்பதோ, எடுத்துச் செல்வதோ சட்டப்படி குற்றம். இதனால் சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள முட்டுக்காடு சோதனைச்சாவடியில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மறித்து சோதனை செய்தனர்.

அந்த காரில் புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 96 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்கள் கார் சாரதி செல்வகுமாரை கைது செய்தார்கள். சாரதியிடம் நடந்த விசாரணையில் அந்த கார் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இந்த சோதனையின் போது காரில் ரம்யா கிருஷ்ணன் இருந்தாரா இல்லையா என்பது பற்றிய தகவல் உறுதியாக தெரியவில்லை. ரம்யா கிருஷ்ணன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.