ஒரு நடிகையின் வாழ்க்கையை காலம் எப்படியெல்லாம் புரட்டிப்போடும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் நடிகை மாளவிகா மோகனன்.
ஆறு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனனுக்கு அதன்பின் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகளே வரவில்லை.
நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழில், அப்படி தேடிவந்தது கூட, பேட்ட படத்தில் கிட்டத்தட்ட ரஜினிக்கு தங்கை வேடம் தான். ஆனால் அந்தப்படத்தில் அவருக்கு கிடைத்த புகழ், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவரை கதாநாயகி ஆக்கிவிட்டது.
விஜய் பட நாயகி என்பதால் தற்போது அவரைத்தேடி நிறைய வாய்ப்புகள் வருகின்றன. சமீபத்தில் கூட, தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிப்பதற்கு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.
கணிசமான தொகை ஒன்றும் சம்பளமாக பேசப்பட்டதாம். ஆனாலும் அதை வேண்டாம் என தவிர்த்துவிட்டாராம் மாளவிகா மோகனன்.
மாஸ்டர் ரிலீஸுக்கு பிறகு முன்னணி கதாநாயகியாக மாறிவிடுவோம் என மாளவிகா திடமாக நம்புவதால் அந்த சமயத்திற்கேற்ப தனது சம்பளத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவில் தான் ரவிதேஜா படத்தை அவர் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.