பிருத்விராஜ் பட இயக்குனர் கவலைக்கிடம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

i3 18 4
i3 18 4

நடிகர் பிருத்விராஜ் திரைவாழ்வில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் அது இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோசியும் படம் தான். இந்த படத்தை இயக்கியவர் சாச்சி என செல்லமாக அழைக்கப்படும் கே.ஆர்.சச்சிதானந்தன்.

அய்யப்பனும் கோசியும் படத்திற்கு முன்பே பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனனை வைத்து அனார்கலி எனும் படத்தை சாச்சி இயக்கியுள்ளார். அதுவும் ஹிட் படம் தான். திலீப்பின் ராம்லீலா, மோகன்லாலின் ரன் பேபி ரன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை அமைத்தவரும் சாச்சி தான். இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள்.

இந்நிலையில் இயக்குனர் சாச்சிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது அறுவை சிகிச்சை முறையாக நடந்துள்ளது. இரண்டாவது அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சாச்சியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சாச்சியின் மூளை செயலிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மலையாள திரையுலகம் கவலையில் இருக்கிறது.