முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்- சௌந்தரராஜா

Soundararaja
Soundararaja

பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நடிகர் சௌந்தரராஜா கூறியிருக்கிறார்.

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் நடிகர்கள், முக்கிய பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சௌந்தரராஜா, பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக  பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாத்தீகம் என்ற பெயரில் பிறர் வழிபாட்டு நம்பிக்கையை இழிவாக பேசுவதால் துவேஷம் பெறுமேயன்றி வேறு எதுவும் நிகழாது. ஓம் சரவணபவ என்று கூறியிருக்கிறார்.