தனுஷ் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் தற்போது அதிகளவான படங்கள் கையில் உள்ளது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் நான் படம் வெளிவந்து 8 வருடமாகிவிட்டது, இதற்காக இப்படத்தின் இயக்குனர் ஜீவா சங்கர் மனம் திறந்துள்ளார்.
அவர் இந்த கதை ஆஸ்கர் சாருக்கு பிடித்து தனுஷ் சாரிடம் கதை சொல்ல சொன்னார், நானும் சென்று சொன்னேன்.
ஆனால், நான் கதை சொன்னதை விட எனக்கு அவர் ஆறுதல் சொன்னது தான் அதிகம், கதை சொல்ல முடியாமல் சொதப்பினேன்.
இரண்டு நாள் கழித்தும் என்னை அழைத்து தனுஷ் இந்த படம் ஏன் செய்யவில்லை என்று விவரித்தார்.
தனுஷ் இந்த படம் செய்யாமல் போனதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என்று கூறியுள்ளார்.