கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சஞ்சீவ், விஜயிடம் தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறித்த தெரிவித்ததாகவும், அதனை தொடர்ந்து அவருக்கு தேவையான உணவை நடிகர் விஜய் தானே எடுத்து வந்து காவலாளியிடம் கொடுத்து சென்றதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.