சுந்தர்.சி இயக்கத்தில் புதிய அவதாரமெடுக்கும் ஆர்யா

123
123

சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை – 3 திரைப்படத்தில் நடிகர் ஆர்யா பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அரண்மனை – 1 மற்றும் அரண்மனை -2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரண்மனை – 3 திரைப்படத்தை சுந்தர்.சி எடுத்துவருகிறார்.

இந்த திரைப்படம் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் ஆர்யா நாயகனாக நடிக்க, நாயகிகளாக ராஷிகன்னாவும், ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர். பிக்பொஸ் சாக்ஷி அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.