துருவ் விக்ரமின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

varma
varma

விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான ஆதித்யவர்மா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அடுத்ததாக தந்தை விக்ரமுடன் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் துருவ்விக்ரம் நடிக்கவிருக்கும் மூன்றாவது திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. துருவ் விக்ரம் மூன்றாவது படத்தை ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு துருவ்விக்ரம் படத்தை இயக்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.