கடந்த சில தினங்களுக்கு முன் நகைசுவை நடிகர் வடிவேலு பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின் பணம் கட்டவில்லை என்பதால் வெளியேற்றப்பட்டார்.
பின் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்க்க அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். அவரது மரணம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று நிதியுதவி செய்தார், சிவகார்த்திகேயன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் அறம் மக்கள் நலச்சங்கள் நிறுவர் வடிவேல் பாலாஜி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு ரூ. 6 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.