சூர்யாவின் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஆவளோடு காத்து கொண்டிருக்கும் படம் சூரரை போற்று. இப்படம் வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி அமேசான் பிரைமில் வெளிவருகிறது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க போகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் உறுதி செய்திருந்தது.
ஆனால் தற்போது வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவில்லையாம். ஆம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் திரைப்படம் சூர்யாவின் 42வது திரைப்படமாக உருவாகிறது.
அப்படத்திற்கு பதிலாக பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 40வது படமாக சூர்யா கிராமத்து கதைக்களம் கொண்ட கதையில் நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து துவங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.