இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர்.
மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார், இவரின் இசைக்கு ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.
சமீப காலமாக அதிகமான படங்களில் இசையமைக்கலாம் இருந்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் படத்தில் மட்டும் கடைசியாக இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக உபயோக படுத்துவது, துணியால் ஆன முகக்கவசம் தான், இதன் மூலம் பேச முடியுமே தவிர பேசுவதை பார்க்க முடியாது.
தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ட்ரான்ஸ்பேரண்ட் முகக்கவசம் ஒன்றை அணிந்த படி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.