எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது” எனத் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர்
என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
எஸ்.பி.பி. பாடலுக்கு இரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .