‘இந்த மாதிரி சூழலில் அஜித் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை’ – சரண் விளக்கம்!

பிரபல பாடகர் எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 25ம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அஞ்சலி செலுத்தினாரா? என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சரண், அஜித் அப்பாவின் மீது அன்பு கொண்டவர். அவர் என்னுடைய நண்பர், வந்தாரா? வரவில்லையா? என்பது பிரச்னை இல்லை. அவர், எனக்கு போன் செய்து பேசினாரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. இந்த மாதிரி சூழலில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, இப்போது இதை பற்றி பேச வேண்டியதுமில்லை. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என்று தெரிவித்தார்.