கடந்த 25ஆம் திகதி இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு.
இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகில் இருந்து பலரும் வந்தனர். அப்போது தனது இறுதி அஞ்சலியை செலுத்து நடிகர் விஜய் வந்திருந்தார்.
எஸ்.பி.பியின் உடலுக்கு இவர் இறுதி அஞ்சலி செலுத்த விஜய்யின் வருங்கால அரசியல் நோக்கம் என்று பலராலும் கூறப்பட்டது.
இந்நிலையில் ” தளபதி விஜய் எஸ்.பி.பி அவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்த வந்ததன் காரணம், அவர் எஸ்.பி.பியின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதற்காக தான். அதில் ஒன்றும் அரசியல் கிடையாது. இதனை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக பேசி வருகிறார்கள் ” என்று நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மானன் அவர்கள் கூறியுள்ளார்.