மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரியோ மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி!

பிக்போஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் தற்போது தான் போட்டியாளர்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி தான் அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார், அந்த வகையில் நேற்று அவர் ரியோவை குறிப்பிட்டு பேசியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் வெடித்தது.

மேலும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ரியோவிடம் இந்த வீட்டில் குரூப்பிஸம் உள்ளது. நீங்களும் குரூப்பிஸமில் உள்ளீர்கள் நிஷா எப்போதும் உங்களுக்கு தான் ஆதரவாக உள்ளார் என சுரேஷ் கூறியுள்ளார்.