நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதனை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்து இருந்தார்.
தற்போது, நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
மிரட்டல் விடுத்தவரின் ஐ பி முகவரி மூலம் இலங்கையில் இருப்பது கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ளவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.