கடந்த சில ஆண்டுகளாக நகைசுவை நடிகர்களில் அதிகம் கவர்ந்தவர் யோகி பாபு தான். அதிகமான பட வாய்ப்புகள் அவருக்கு வந்த வண்ணம் இருக்கின்றன். துணை நடிகராகவும் பல படங்களில் நடித்திருந்தார்.
சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அவர் கதா நாயகனாக பேய் மாமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசியவர் படங்களில் இனி நான் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடிப்பேன், கதாநாயகனாக டூயட் பாட மாட்டேன். அந்த காட்சிகளையும் தவிர்ப்பேன்.
என்னுடைய முகம் நகைச்சுவைக்கு மட்டும் பொருந்தும் என்பதை நன்றாக அறிவேன். கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்தது கூட ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக தான் என யோகி பாபு கூறியுள்ளார்.