இந்த‌ இரண்டும் தான் எனக்கு அழகு – அனுபமா

anupama
anupama

பிரேமம் என்ற படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் புகழப்பட்டவர் சாய் பல்லவி. அவருக்கு அடுத்து அதே படத்தால் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரியளவில் பேசப்பட்டவர் நடிகை அனுபமா.

இவர் தொடர்ந்து மலையாளம், தெலுங்கில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார், தமிழில் இன்னும் பெரிதாக படங்கள் நடிக்க ஆரம்பிக்கவில்லை.

இந்த ஊரடங்கு நேரத்தில் சில நடிகைகளை போல இவரும் புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

அண்மையில் அனுபமா ஒரு பேட்டியில், என்னுடைய அழகிற்கு 2 விஷயங்கள் தான் காரணம். எனது கண்களும், சிரிப்பும் தான் அழகிற்கு காரணம் என கூறியுள்ளார். தனது முடி அடர்த்தியாக இருக்க தினமும் தேங்காய் எண்ணெய் பூசுவது தான் என்றும் கூறி அவருடைய அழகின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.