இயக்குனர் சுதா கொங்கரா தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர், இவர் துரோகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியான இறுதி சுற்று படம், மிக சிறந்த விமர்சங்களை பெற்று இவரை பெரிய அளவில் பிரபலமாகியது.
இந்நிலையில் மூன்றாவதாக நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் சுதா கொங்கரா, இப்படத்தை மிக சிறப்பாக இயக்கி இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
மேலும் இவர் அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து இயக்கவுள்ளார் என கூறப்பட்டது.
இதனிடையே தற்போது நடிகர் கார்த்தி தான் இயக்குனர் சுதாவின் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.