ஹிந்தி திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நடிகை தீபிகா படுகோன் காணப்படுகிறார்.
இதன்படி தற்போது தீபிகா படுகோன் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஷாருக்கான், பதான் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதில் அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. ஷாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம் படம் மூலம்தான் தீபிகா படுகோனே இந்தியில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.