கடந்த இரண்டு நாட்களாக தமிழக மக்களை மிரட்டி கொண்டிருந்த நிவர் புயல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது.
இப் புயலால் கடும் மழை பெய்துள்ளதுடன் அதன் காரணமாக சென்னை உட்பட ஒருசில கடலோர நகரங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
மேலும் சென்னையின் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் நடிகர் மன்சூர்அலிகான் தனது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை அடுத்து வீதியில் படகோட்டியவாறு பாட்டுன் பாடி செல்லும் வீடியோவானது தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ’பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ’உயிரே உயிரே’ என்ற பாடலின் மெட்டில் ’புயலே புயலே எங்கள் தமிழ்நாட்டை விட்டு ஓடிவிடு’ என்று பாடிக்கொண்டே அவர் படகோட்டும் குறித்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.