அப்பா சொன்ன வார்த்தையை மறக்க முடியாது- இயக்குனர் சிவா

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருபவர் இயக்குனர் சிவா. அவரின் அப்பா ஜெயக்குமார் அண்மையில் காலமானார். திரைத்துறையில் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

வீரம், விவேகம், விஸ்வாசம் என அஜித்தின் படங்களை இயக்கியவர் சிவா. அப்பா தான் என் ரோல் மாடல் என்பதில் உறுதியாக இருக்கும் சிவா நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாது இருந்த அப்பாவை எங்களால் முடிந்தளவிற்கு முயற்சி செய்து பார்த்துக்கொண்டோம். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

கடைசி காலத்தில் கடைசியாக அவரின் அப்பா நல்லாயிருனு சொன்னாராம். இந்த வார்த்தையை மறக்க முடியாது என கூறும் சிவா, இதை பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன் என உருக்கத்துடன் பேசியுள்ளார்.