விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

jpg
jpg

தமிழ்த் திரையுலகிலுள்ள நடிகர், நடிகைகளின் வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதன்பின் வதந்தி என்று கூறுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இறுதியில் அது வதந்தி என்று கூறப்பட்டது.

அந்த வகையில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றைய தினம் மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருவான்மியூர் காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருவதுடன் மர்ம நபர் குறித்த விசாரணையையும் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.